Wednesday, May 1, 2019

Nero

நீரோ மன்னன் நல்லவனா? கெட்டவனா?

வரலாற்று ஆசிரியர்களால்  நீரோ மன்னன் (Nero Germanicus AD 54- AD 68) பெரும் தீங்குகள் இழைத்தவனாகக் கருதப்படுகிறான். சிலர் ஆர்வக் கோளாறு காரணமாக அவனை ஹிட்லர், ஸ்டாலினுக்கு ஒப்பான கொடூரமான மன்னனாகச் சித்தரிக்கிறார்கள்.

ஆனால் இப்போது நீரோவின் வரலாறு, மறுவாசிப்புக்கு உள்ளாகி வருகிறது. அவன் தனக்கு முன்னும் பின்னும் ஆண்ட மன்னர்களை விட நல்லவனும் அல்ல, கெட்டவனும் அல்ல என்ற கருத்தாக்கம், வரலாற்று ஆசிரியர்களிடையே வலுபெற்று வந்தாலும், நீரோ தன் காலத்துக்கு மிக முற்போக்கான சீர்திருத்தவாதி எனவும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கருதுகிறார்கள்.

நீரோ மன்னன் மேல் சுமத்தப்படும் குற்றச்சாற்றுகளில் சில, அவன் தன் தாயுடன் கள்ள உறவு வைத்திருந்தவன், தங்கையை மணந்தவன், கர்ப்பமான மனைவியை எட்டி உதைத்துக் கொன்றவன், தாயைக் கொன்றவன், தம்பியைக் கொன்றவன் என்பது. ஆனால் இதை எல்லாம் தாண்டி, ரோம் நகரம் பற்றி எரிகையில் அவன் பிடில் வாசித்தான் எனும் குற்றச்சாற்றும் பின்னாட்களில் செல்வாக்கு பெற்ற இரு மதங்களுக்கு அழியாத தீமை செய்தவன் என்பதும் அவன் பெயர் கெட, மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது.

நீரோ மன்னன் புரட்சி செய்த யூதர்களைத் தோற்கடித்து, இரன்டாவது யூதக் கோயிலைச் சூறையாடி அழித்தான். அன்று ரோமானியப் பேரரசில் மிகவும் கலகக்காரர்களாக இருந்த கிறிஸ்துவர்களைத் தீயில் தூக்கிப் போட்டுக் கொன்று புனித பால், புனித பீட்டர் எனும் இரு அப்போஸ்தலர்களைச் சிலுவையில் அறைந்தும் தலையை வெட்டியும் கொன்றான். இவர்களில் பீட்டர் தான் முதலாம் கத்தோலிக்க போப் ஆக அறியப்படுபவர். ஆக, நீரோவின் பெயர் பின்னாட்களில் கெட்டதில் விந்தை எதுவும் இல்லை.

நீரோவின் தாய்மாமன் காலிகூலா (Caligula) ரோமானிய சக்கரவர்த்தி ஆனதும் நீரோவின் குடும்பத்தை நாடு கடத்தினான். ஆனால் காலிகூலாவிற்குப் பின்னர் ரோமானிய சக்கரவர்த்தி ஆன அவனுடைய தாய்மாமன் கிளாடியஸ் (Emperor Cladius) தன் அக்கா மகளான நீரோவின் தாயை மணந்து கொண்டதும் நீரோ இளவரசு பட்டம் பெற்றான். கிளாடியஸுக்கு இன்னொரு திருமணம் மூலம் பிரிட்டனிகஸ் (Brittanicus) எனும் மகன் இருந்தான். இருந்தும் நீரோ அவனை விட வயதில் மூத்தவனாக இருந்தான்.

அத்துடன் தன் திறமையால் சக்கரவர்த்தி கிளாடியஸின் மனத்தையும் கவர்ந்தான். அதனால் மன்னர் கிளாடியஸ் தன் இன்னொரு மனைவிக்குப் பிறந்த ஓக்டேவியா (Octavia) எனும் மகளை நீரோவுக்குத் திருமணம் செய்வித்து அவனை இளவரசனாக அறிவித்தான். இத்தகைய சகோதர மணம், அன்றைய ரோமில் அனுமதிக்கப்பட்டதே.

இந்தச் சூழலில் நீரோ மன்னனாக வேண்டும் என்ற நோக்கில் நீரோவின் தாய் அக்ரிப்பினா (Agrippina the Younger), மன்னன் கிளாடியஸுக்கு விஷக் காளான்களை உணவாகக் கொடுத்துக் கொன்றாள். இதில் நீரோவுக்குத் தொடர்பு உண்டா, இல்லையா என்ற சர்ச்சை இன்னமும் நிலவுகிறது. ஆனால் நீரோ அதன்பின் காளான்களை மிகவும் நேசிக்கத் தொடங்கியதாகவும் "கடவுள்களின் உணவு" எனக் காளான்களைப் போற்றியதாகவும் தெரிகிறது!

இப்படி 17 வயதில், கிபி 54ஆம் ஆண்டு மன்னன் ஆன நீரோ, அதன்பின் தாய்க்குக் கட்டுப்பட்டு ஆட்சி நடத்தி வந்தான். தாயுடன் அவனுக்குத் தொடர்பு இருப்பதாக பின்னாளைய கிறிஸ்துவ வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்தாலும், இது நீரோ மேல் அவர்களுக்கு இருந்த அளவுகடந்த வெறுப்பின் காரணமாக எழுதப்பட்டது என்ற கருத்தும் காணப்படுகிறது. நீரோ வளர வளர, தாயின் பிடியில் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக ஆட்சி நடத்த ஆரம்பித்தான். அவன் தாய் அக்ரிப்பினஸ், அதன்பின் நீரோவை ஆட்சியில் இருந்து அகற்றி, தம்பி பிரிட்டானிகஸை ஆட்சியில் அமர்த்த முயன்றாள். அதனால் நீரோ அவர்கள் இருவரையும் கொன்றுவிட்டான்.

அதன்பின் நீரோவின் கவனம், தன் மனைவி ஒக்டேவியா மேல் திரும்பியது. ஓக்டேவியாவை மணந்தால் அரச பதவி கிடைக்கும் என்பதால் தான் நீரோ அவளை மணந்தான். இன்று அரசனான பின், ஓக்டேவியா அவனுக்கு அவசியமாகப் படவில்லை. அதனால் ஓக்டேவியாவுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்ற காரணம் காட்டி, அவளை விவாகரத்து செய்து, பின்னர் கொன்றும் விட்டான். இன்று அது எல்லாம் தவறாகக் கருதப்பட்டாலும் அன்றைய சூழலில் மன்னர்கள் எல்லாம் படுகொலை செய்யப்படுவதும், போட்டியாளர்கள் ஆட்சிக்கு வருவதும் சாதாரணம். நீரோவே அப்படித் தான் ஆட்சியில் அமர்ந்தவன். அதனால் எதிராளிகள் மேல் அவன் இரக்கம் காட்டாததில் வியப்பு இல்லை.

ஆட்சியைப் பிடிப்பதில் நீரோ மூர்க்கத்தனம் காட்டினாலும் மக்களிடம் மிகவும் தன்மையாக நடந்துகொண்டான். பிரபுக்கள் சபையான செனட்டைத் தாண்டி ஏழைகள், அடித்தட்டு வர்க்கத்துக்கு நன்மை செய்தான். அன்றைய வரிவிகிதங்கள் மிகவும் கடுமையாக இருந்ததால் வரியை 4.5%இல் இருந்து 2.5% ஆகக் குறைத்தான். அடிமைகளின் சுதந்திரத்தை எஜமானர்கள் தடுக்கலாம் என்ற சட்டத்தை ரோமானிய செனட் இயற்ற முயன்றபோது, அச்சட்டத்தை நீரோ வீட்டோ செய்தான். வக்கீல்கள் அன்று மக்களிடையே ஏராளமாகக் கட்டணம் வசூலித்து வந்தார்கள். அந்தக் கட்டணத்தை நீரோ மன்னன் குறைத்தான். இவை எல்லாம் மக்கள் மத்தியில் அவனுக்கு மாபெரும் செல்வாக்கை ஏற்படுத்தின.

இதுபோக நீரோ, ஒரு பெரிய இசைக் கலைஞன் என்பதால் ரோமானிய தெருக்களில் அவனே பாடல்களைப் பாடி, மக்களை மகிழ்வித்தான். கிரேக்கத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு, ரதம் செலுத்தும் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று வந்தான். அப்போட்டியில் ரதம் கவிழ்ந்து அவனது உயிருக்கு அபாயம் வரும் சூழல் கூட ஏற்பட்டது. ஆக, நீரோ அன்றைய ரோமானியர்கள் மனத்தில் ஒரு ஹீரோ இமேஜை அடைந்தான். பிரபுக்களும் செனட்டும் அவனை வெறுக்கவும் இது காரணமாக அமைந்தது.

இந்தச் சூழலில் கிபி 64ஆம் ஆண்டு, ரோமில் மிகப் பெரிய தீவிபத்து ஏற்பட்டது. ரோமில் பாதி, பற்றி எரிந்தது. இத்தீவிபத்துக்குக் காரணம் கிறிஸ்தவர்களே என நீரோ குற்றம் சாற்றினான். நீரோவுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் முன்பே பகைமை இருந்து வந்தது. நீரோ இன்றைய சுதந்திர தேவி சிலைக்கு ஒப்பான உயரத்தில் தன் சிலையைச் செதுக்கி, அதை மக்களை வழிபடப் பணித்தான். அன்றைய கிறிஸ்தவர்களும் யூதர்களும் அதை ஏற்க மறுத்தார்கள்.

(#படம்: நீரோ மன்னன் சிலையும் இன்றைய சுதந்திர தேவி சிலையும். அக்காலத்தில் நீரோவின் சிலைக்கு ஒப்பான எந்தச் சிலையும் உலகில் இல்லை. பின்னாட்களில் இச்சிலை அழிக்கப்பட்டது)

அன்று இஸ்ரேல், ரோமானிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியே. இதனால் கோபத்துடன் இருந்த நீரோ, இத்தீவிபத்துக்குக் காரணம் கிறிஸ்தவர்கள் சதியே எனக் கூறி, கிறிஸ்தவர்களைத் தீயில் தூக்கிப் போட்டான். இந்தச் சூழலில் அப்போஸ்தலர்களான புனித பாலும் பீட்டரும் கொல்லப்பட்டார்கள். இது நீரோ ஆட்சிக் காலத்தில் நடந்து இருந்தாலும் நீரோவுக்குத் தெரிந்து இது நடந்ததாகக் குறிப்புகள் இல்லை. நீரோவைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களில் இருவர்.

அதன்பின் அழிந்த ரோமில், மிகப் பெரும் கொலேசியம் ஒன்றையும் அரண்மனை ஒன்றையும் நீரோ கட்டினான். இதனால் இந்தப் புதிய நகரை உருவாக்கவே, ரோமுக்கு நீரோ தீ வைத்ததாகப் பலரும் நம்பினார்கள். ரோம் பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்ததாக, அவனுக்கு 150 ஆண்டுகள் பின்னால் இருந்த வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பு எழுதினாலும் ரோம் எரிகையில் நீரோ, ரோமில் இல்லை என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

இந்தச் சூழலில் யூதர்கள் கலகம் செய்ததால் ஜெருசலத்தைப் பிடித்த ரோமானிய படைகள், யூதர்களை அங்கிருந்து அடித்து விரட்டி, இரண்டாவது யூதக் கோயிலை இடித்துத் தள்ளின. பின்னாளில் யூத மதமும் கிறிஸ்தவ மதமும் மிகப் பெரும் செல்வாக்குப் பெற்றாலும் அன்றைய ரோமில் அவ்விரு மதங்களும் இரு சிறு குழுக்களே. இந்தச் சூழலில் கால்பா எனும் தளபதி, நீரோவுக்கு எதிராகப் புரட்சி செய்தான். நீரோ மேல் கோபத்துடன் இருந்த செனட்டும் அவனைப் பதவிநீக்கம் செய்ய முடிவு செய்தது.

14 ஆண்டுகள் ஆட்சி புரிந்தபின் இப்படி கிபி 68ஆம் ஆண்டு புரட்சி உருவானதால் நீரோ திகைத்துத் தடுமாறினான். செனட் அவனைத் தேசத் துரோகியாக அறிவித்ததாக வதந்தி பரவியது. ஆனால் செனட்டில் அப்போது நீரோ மன்னன் மேல் பலரும் பரிவுடன் இருந்தார்கள். தளபதி கால்பாவைத் தேசத் துரோகியாக அறிவித்தும், நீரோ மேல் நம்பிக்கை தெரிவித்தும் தீர்மானம் இயற்றி, அதை நீரோவிடம் தெரிவிக்கப் படைகளை அனுப்பினார்கள்.

ஆனால் அவர்கள் தன்னை கைது செய்ய வருவதாக எண்ணிய நீரோ, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தான். "எப்பேர்ப்பட்ட கலைஞன் என்னுடன் மரணிக்கிறான்?" என வருந்தியபடி தன் மெய்க் காப்பாளனைத் தன்னைக் கத்தியால் குத்திக் கொல்லப் பணித்தான். நீரோவைக் கத்தியால் குத்தியபின் படைவீரர்கள் வந்து, செனட் அவன் மேல் நம்பிக்கை தெரிவித்திருப்பதைத் தெரிவித்தார்கள். மரணப் படுக்கையில் நீரோவின் முகத்தில் புன்னகை தோன்றியது..

"மிகத் தாமதமாக நம்பிக்கை தெரிவித்துவிட்டீர்கள்" எனச் சொன்னபடி, ரோமாபுரியின் மன்னனாக உயிர் நீத்தான் நீரோ.

நன்றி.

Sunday, March 17, 2019

Osho

ஓஷோவிடம் தியான அன்பர் கேட்ட கேள்விக்கு ஓஷோவின்
பதில் :

அன்புள்ள ஓஷோ,
நான் கடவுளை வழிபட விரும்புகிறேன். தயவுசெய்து எனக்கு அந்த வழியைக் கற்பியுங்கள்.

கடவுளைத் தொந்தரவு செய்யாதே. அவருக்கு சொந்தப் பிரச்சினைகள் உள்ளன. அவர் படைப்பதெல்லாம் அழிந்து போவதை நீ கண்டதில்லையா? உன்னுடைய பிரச்சினைகளை உன்னோடு வைத்துக்கொள். ஒருவன் ஏன் கடவுளை வழிபட வேண்டும்? கடவுளுக்கு உனது வழிபாடு தேவையில்லை. உனக்கு வேண்டுமானால் அந்த வழிபாடு தேவையாக இருக்கலாம். ஆனால் அந்த வழிபாடானது உனது ஆசைகளை, உனது கோரிக்கைகளை குரல் மூலம் தெரிவிப்பதும், புகார்களை வெளிப்படுத்தவதுமாகத் தான் இருக்குமேயல்லாமல் அதற்கு மேல் ஒன்றும் இருக்காது. இதைத்தான் மக்கள் வழிபாடு என்ற பெயரில் செய்து வருகிறார்கள். புகார் செய்கிறார்கள்; புகார் செய்கிறார்கள்; புகார் செய்துகொண்டே இருக்கிறார்கள். மேலும், சில விஷயங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். ஏதோ கடவுளை இன்னும் கொஞ்சம் புத்திசாலியாக்க இருக்க இவர்கள் முயற்சிக்கிறார்கள்.

வேண்டாம், வழிபாடு தேவை இல்லை. தியானம் தேவைப்படுகிறது. தியானம் என்பது கடவுளைக் குறிப்பிடுவது அல்ல. தியானம் உன்னை மாற்றுகிறது. அது கடவுளை கணக்கில் எடுத்துக்கொள்ளாது. மேலும் எந்த ஒரு வழியிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை. இப்படியிருக்கும்போது நீ அறிந்திராத ஏதோ ஒன்றை நீ எப்படி வழிபட முடியும்? ஏந்த மொழியில் நீ கடவுளை வழிபடப்போகிறாய்? நீ அவரைப் பற்றி அறிந்திருக்கவே இல்லையே. மேலும் கடவுளை வழிபடுவதன் மூலமே நீ அவரை அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகிற மக்களும் உள்ளனர். ஆனால் வழிபடுவதற்கு முன்பு ஒன்று தேவைப்படுகிறது ; அடிப்படைத் தேவையாக உள்ளது. அது நீ கடவுளை அடைந்திருக்க வேண்டுமென்பதே. அப்போதுதான் அவர் மீது அன்பு செலுத்த முடியும். நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்துவாய்! உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காகத்தான் இருக்கும். அது செய்து செய்து சலித்துப் போன ஒன்றாக மட்டுமே இருக்கும்.

தியானம் என்பது முற்றிலும் மாறுபட்ட பரிமாணமாகும். கபீர் தியானத்தைதான் குறிப்பாகத் தெரிவிப்பார். புத்தரும் தியானத்தைத்தான் குறிப்பாகத் தெரிவித்தார். நானும் தியானத்தைத்தான் தெரிவிக்கிறேன். தியானம் ஒரு மாறுபட்ட அணுகுமுறையாகும். அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமே இல்லை. தியானத்திற்கு உன்னோடும் உன்னுடைய மனத்தோடும்தான் வேலை. அது உனக்குள் ஒரு மௌனத்தை, ஓர் ஆழந்த பூரணமான மௌனத்தை உருவாக்கும். அப்படிப்பட்ட பூரண மௌனத்தில் கடவுள் இருப்பதை நீ உணர ஆரம்பிப்பாய்.

உண்மையான தியானத்தின் பின் விளைவே வழிபடுதல் ஆகும். தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை வழிபட முடியும். ஏனெனில் அவன்தான் அவரை அறிந்துள்ளான். அவன்தான் அவரை உணர்ந்துள்ளான். மேலும் இப்போது கடவுள் இருக்கிறார் என்பது அவனுக்கு வெறும் வாதிடக்கூடிய விஷயமாக, தர்க்கம் செய்கின்ற விஷயமாக இல்லாமல் அவன் அனுபவித்த ஒன்றாக, அவன் வாழ்ந்து பார்த்த ஒன்றாக ஆகிவிடும். அப்போதுதான் வழிபாடு என்பது எந்தவிதமான குறைகளையும் கூறாத ஒன்றாக இருக்கும். வழிபாட்டோடு எந்தவித ஆசையையும், எந்தவித கட்டுப்பாடுகளையும் சேர்ப்பதில்லை. அப்போது வழிபாடு ஒரு கலபட்படமற்ற அறிவித்தல் ஆகிவிடும்.

எந்தவொன்றையும் தத்துவ விசாரணை பண்ணாதே ..

அனுபவத்தில் உணர் .. வாழ்வு இனிப்பாகும்

Saturday, March 16, 2019

*அறிவோம்...* *தெளிவோம்..!*

*உண்மையான பரிசு!*

ஐந்து வயது சிறுமி அமுதா தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள். அங்கே ஒரு முத்துமாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள்.

“அம்மு... இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே.. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை...

நான் உன்னோட பிறந்தநாளைக்கு அப்பாகிட்ட சொல்லி 'ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்' மாலை வாங்கி தரசொல்றேன்... இது வேண்டாம்மா" என்றாள் அம்மா.

ஆனால் அமுதா, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்...

அமுதாவுக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப்போனது.

அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள்/ உடன் வைத்திருந்தாள்.

பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள் அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ அம்மா சொல்லியும் கூட கேட்கவில்லை.  எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு.

அமுதாவின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் அமுதாவுக்கு படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “அம்மு... என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?”

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்துமாலை மட்டும் தர மட்டேன்ம்பா...” என்றாள்.

"பரவால்லை குட்டிம்மா..."  என்று புன்னகையுடன் பதில் சொன்னார் அப்பா.

இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “அம்மு... என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்” -அமுதா

“அப்போ, உன்னோட முத்துமாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ.. முடியாதுப்பா... நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க... முத்துமாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்... அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அமுதா.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவால்லை குட்டி..” என்றார் அப்பா.

சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், அப்பா இரவு கதை சொல்ல வந்தபோது.... அமுதா ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா...” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்துமாலையை எடுத்து அப்பாவின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்... சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட அப்பா, மறுகையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆனா ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். அமுதா தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர்... அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை தந்தார்.

"இதை உனக்கு தருவதற்காகத்தான்டா அம்மு... நான் தினமும்  அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்..." என்றார் அப்பா.

இந்த தகப்பன் யாருமல்ல... நம் எல்லோருக்கும் தந்தையான இறைவன்...
அந்த குழந்தை தான் நாம்.

ஆம். இதுபோலத்தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கைவிடுவதற்கு தயாராக இல்லை.

*அத்தகைய போலியான விசயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான ஒன்றை நமக்கு பரிசளிப்பான்.*

நமது மோசமான  பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள்/ உறவுகள்... போன்ற எது வேண்டுமானாலும்  நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.. அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கைவிட கடினமானவைகளாக இருக்கலாம்...

ஆனால் அவைகளை எல்லாம்விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன.... அத்தகைய சிறப்பான ஒன்றை பெறவேண்டுமானால்... போலியான மலிவான விசயங்களை நாம் கைவிட வேண்டும்.

அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை.

*அறிவோம்...*
*தெளிவோம்..!*

Friday, March 15, 2019

*தெய்வத்தின் பார்வையில் நேரங்கள்...!!*👇�

🌞🌞 *தெய்வத்தின் பார்வையில் நேரங்கள்...!!*👇�

🌞 *எது நல்ல நேரம் ?* 
• நல்லதை நினைக்கும் போது
• நல்லதை பார்க்கும் போது
• நல்லதை கேட்கும் போது
• நல்லதை பேசும் போது

🌞 *எது இராகு காலம் ?*
• அகங்காரம் கொள்ளும் நேரம்
• பாசம் கண்களை மறைக்கும் நேரம்
• ஆசைகள் எல்லையை மீறும் நேரம்
• கோபங்கள் உச்சத்தை தொடும் நேரம்
• தேகம் கவர்ச்சிக்கும், கவர்ச்சியில் மூழ்கும் நேரம்

🌞 *எது குளிகை ?*
• கவலைப்படும் நேரம்
• பயப்படும் நேரம்
• கலங்கும் நேரம்
• முயலாத நேரம்

🌞 *எது எமகண்டம் ?*
• பொறாமைப்படும் நேரம்
• புறம் கூறும் நேரம்
• கோள்சொல்லும் நேரம்
• சதி செய்யும் நேரம்

🌞 *எது பிரம்மமுகூர்த்தம் ?*
• தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்
• கடமையில் வழுவாத நேரம்
• அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்

🌞 *எதுசுபமுகூர்த்தம் ?*
• சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்
• சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்

பணத்தின் கவர்ச்சி :

பணத்தின் கவர்ச்சி :

ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.

அவர்கள் பரவாயில்லை.

இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

நன்னெறியைப் பற்றியும்,அதன் மூலம் சொர்க்கத்தை

அடைவதைப் பற்றி சிந்திப்பதும்,

பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.

ஒரு மனிதன் நிகழ்  காலத்தில் வாழும்போது மட்டும்தான்

பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்

.பணம் என்பது எதிர்காலம்.

எதிர்காலத்துக்கான பாதுகாப்பு.அதிகாரத்தின் அடையாளம்.

அதனால்தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.

ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது.

ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது.

மக்கள் அதிகாரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர்.

ஏன் என்றால் அவர்கள் அவர்களுக்குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள்.

அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர்.

அது பணமாக இருக்கலாம்;அதிகாரமாக இருக்கலாம்;

தன்  மதிப்பாக இருக்கலாம்;மற்றோரால் மதிக்கப் படுவதாக இருக்கலாம்;

நல்ல குண நலன்களாக இருக்கலாம்.

இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.

இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை.

இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள்.

அவர்கள் நிரம்ப குப்பையை சேகரிக்கிறார்கள்.

அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.

வெறுமையை அப்படியே காண முயலும்

இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள்
ஆகிறார்கள்.

உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார்.

எதிர்காலத்தை விட்டுவிடு.

அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்.

--- ஓஷோ ---

அம்மை நோய் வராமல் இருக்க என்ன செய்வது வந்தபின் எப்படி குணமாக்குவது

அம்மை நோய் வராமல் இருக்க என்ன செய்வது வந்தபின் எப்படி குணமாக்குவது என்று பார்ப்போம்*
🍃🍃🍃🍃🍃🍃
*அம்மை நோய் என்றாலே எல்லோரும் சற்று அச்சமடைவது இயல்பு. இந்நோய் வந்தால் சில நாட்களுக்கு வெளியில் எங்கும் செல்ல முடியாது. சின்னம்மை, தட்டம்மை, பெரியம்மை என்பது அம்மை நோய்களின் சில வகைகளாகும். கிராம மக்கள் இந்நோயை “அம்மன் இறங்குதல்” என்று குறிப்பிடுவார்கள். இந்நோய் தொற்றும் தன்மைக் கொண்டது. ஏற்கனவே இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவதால் இந்நோய் மற்றவர்களுக்கு பரவும். மேலும் கோடைக்காலத்தில் உடல் அதிக வெப்பமடைவதாலும் இந்நோய் ஏற்படும். அம்மை நோய் அறிகுறிகள்: முதலில் இது சாதாரண காய்ச்சல் போல தான் துவங்கம். ஆனால் ஓர் இரு நாளில் காய்ச்சல் கடுமையாகும், கை, கால் வலி, தலைவலி போன்றவை ஏற்படும். அதோடு உடலில் ஆங்காங்கு அரிப்பு ஏற்பட்டு சிறு சிறு கொப்பளங்கள் வர துவங்கும்.* -

*அம்மை நோய் வராமல் இருக்க நீர்ச்சத்து பழங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் காலை மாலை இரு வேளை குளிக்க வேண்டும் உடலில் அதிகப்படியான உஷ்ணம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் உப்பு புளி காரம்  குறைத்துக் கொள்ள வேண்டும்*
🍃🍃🍃🍃🍃🍃
*அம்மை நோய் வந்தர்வர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை கீழே பார்ப்போம்.*
🍃🍃🍃🍃🍃🍃
*குறிப்பு 1 : அம்மை நோய் விரைவில் குணமாக வேப்பிலை படுக்கை என்பது அவசியமாகிறது. மெல்லிய ஆடையை உடுத்துக்கொண்டு தரையில் ஒரு துணி போட்டு அதன் மேல் வேப்பிலை போட்டு படுத்திருந்தால் இந்த நோயின் தாக்கம் குறையும்.*
🍃🍃🍃🍃🍃🍃
*குறிப்பு 2 : அம்மை நோய் அதிக அளவில் பரவுவதற்கும், அந்த நோயால் ஏற்பட்ட குப்பளங்களின் தழும்புகள் எளிதில் மறையவும் வேப்பிலை உதவுகிறது. அம்மை நோய் உள்ள காலங்களில், உடல் முழுவதும் நிறைய அரிப்பு இருக்கும். அந்த சமயத்தில் விரல்களால் சொறியக்கூடாது. மாறாக வேப்பிள்ளையை எடுத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி விட வேண்டும். இதனால் அந்த கொப்பளத்தில் இருந்து வடியும் நீர் வேறெங்கும் பரவாமல் இருக்கும்.* 
🍃🍃🍃🍃🍃🍃
*குறிப்பு 3 : மலை வாழைப்பழத்தை உண்பதற்கு கொடுக்க வேண்டும். இதன் மூலம் அம்மையால் வயிற்றில் ஏற்பட்ட ரணங்கள் ஆறும். 20 வேப்பிலை இலைகளை எடுத்துக்கொண்டு அதோடு சிறிதளவு மஞ்சள் சேர்த்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி நன்கு சுண்டும் வரை காய்ச்சி அதை குடிக்க வேண்டும். இதன் மூலம் அம்மை விரைவில் குணமாகும்.*
🍃🍃🍃🍃🍃🍃
*குறிப்பு 4 : அம்மை இறங்கும் சமயத்தில் குளிக்கும் போது வேப்பிலையையும் மஞ்சளையும் கலந்து நன்கு மைபோல் அரைத்துக் கொண்டு உடல்முழுக்கப் பூசிக்கொண்டு சிறிது நேரங்கழித்து மஞ்சள்தூள் கலந்த வேப்பிலையை ஊறவைத்த குளிர்ந்த நீரில் தலைக்கு ஊற்றிக்கொள்ள அம்மைநோய் முழுவதுமாக நீங்கும்.*
🍃🍃🍃🍃🍃
*குறிப்பு 5 : அம்மை நோய் பரவ முதல் காரணம் இந்நோயின் தொற்றும் தன்மை என்று ஏற்கனவேக் கண்டோம். இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களிடம் சில நாட்களுக்கு உடல்ரீதியாக நெருங்காமல் இருப்பதால் இந்நோய்த் பரவலைத் தடுக்க முடியும். அதோடு விளையாட்டுள் பயன்படுத்திய ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை நன்கு துவைக்காமல் பயன்படுத்த கூடாது. வாழுமிடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளுதல்,தூய்மையான ஆடைகளை அணிதல், உடல் வெப்பம் மற்றும் வியர்வையினால் ஏற்படும் கிருமிகளை போக்க தினமும் இருவேளைக் குளித்தல், போன்ற சுற்றுப்புற, உடற்தூய்மையைக் காப்பதின் மூலமும் அம்மை ஏற்படாமல் தடுக்கலாம்.*
🍃🍃🍃🍃🍃🍃🍃
*பாட்டி வைத்தியம்*
🍃🍃🍃🍃🍃🍃
*லேசாக உப்பு சர்க்கரை சேர்த்து தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் சோர்வு தீரும்.*
🍃🍃🍃🍃🍃🍃
*அம்மை நோய் குணமடைந்த பின் வெள்ளரிப் பழத்துடன் நாட்டு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் பலவீனம் நீங்கும்.*
🍃🍃🍃🍃🍃🍃
*உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு பூண்டு, வெங்காயம் இரண்டையும் நெய்யில் வதக்கி சாப்பிடலாம்.*
🍃🍃🍃🍃🍃🍃
*அம்மை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் தணிய வேப்பிலை, நெய்,*
*தேன் மூன்றையும் சேர்த்து புகை மூட்டம் போட்டால் காய்ச்சல் உடனே குறையும்.*

*வேப்பிலை, நெல்லி முள்ளி இரண்டையும் அரைத்து வெண்ணெய் கலந்து உடலில் பூசிக் கொண்டால் அம்மை அரிப்பு குணமாகும்.*
🍃🍃🍃🍃🍃🍃
*வேப்பமரப் பட்டை, 2 ஸ்பூன் சீரகம் சேர்த்து பொடி செய்து பசும்பால் சேர்த்து குடித்தால் காய்ச்சல் குணமாகும்.*
🍃🍃🍃🍃🍃🍃
*அம்மை நோய் குணமான பின்னர் ரோஜா, செம்பருத்தி,* *சிறுபருப்பு, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வந்தால் உடலின் அழகு கூடும்.*
🍃🍃🍃🍃🍃🍃
*மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து சாப்பிட்டால் காய்ச்சல் உடனடியாக குணமாகும்.*
*முருங்கை வேரை பாலில் கொதிக்க வைத்துக் குடித்தால் இழந்த சக்தியை பெறலாம்.*
*மருதம் பட்டை, வேப்பம் பட்டை இரண்டையும் சம அளவில் அரைத்து சாப்பிட்டால் கிருமித் தொற்று ஏற்படாது*